"உன்னை வச்சிக்கத்தான் முடியும் ,கட்டிக்க முடியாது" -திட்டிய காதலனால் பெண் பொறியாளரின் கதி
திருமணம் செய்து கொள்ளும்படி கூறிய மென் பொறியாளர் பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தை சேர்ந்த 23 வயதான தனேஸ்வரிக்கும் , 23 வயதான சிவகுமார் சந்திரசேகர் ஹிரேஹாலா என்ற வாலிபருக்கும் கல்லுாரியில் படிக்கும் காலத்திலிருந்தே காதல் ஏற்பட்டது. பின்னர் இருவருக்கும் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராக வேலை கிடைத்தது .அதன் பிறகு இருவரும் அந்த ஊரில் ஒரு வீடு எடுத்து லிவிங் டுகதராக ஒன்றாக வாழ்ந்து வந்தனர் .அதன் பின் அந்த பெண் அந்த காதலனிடம் தன்னை கல்யாணம் செய்து கொள்ள வற்புறுத்தினார் .ஆனால் அந்த காதலன் அவரின் சாதியை சொல்லி திட்டி ,உன்னை வச்சிக்கத்தான் முடியும் ,கட்டிக்க முடியாது என்றார்
இதனால் அந்த பெண் அவரின் ஆபீஸிற்கே சென்று சண்டை போட்டார் .இதனால் கோவப்பட் அந்த காதலன் அந்த பெண்ணை கட்டிப்பதாக கூறி ஒரு தனிமையான இடத்திற்கு வர சொன்னார் .பின்னர் அங்கு சென்ற
அந்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்திய பிறகு, அவரை மருத்துவமனையில் சேர்த்து விட்டு தலைமறைவாகி விட்டார். அந்த பெண் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்கு பதிந்து சிவகுமாரை, தேடி வருகின்றனர்.