"கூட்டம்னு வர வச்சி ,கார்ல வச்சி .."ஒரு கட்சியின் மீட்டிங் போன பெண்ணுக்கு நேர்ந்த கதி
ஒரு கட்சி கூட்டத்திற்கு காரில் கூட்டி சென்று ஒரு பெண்ணை பலாத்காரம் செய்தவர்களை போலீஸ் விசாரித்து வருகிறது
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லா பகுதியில் வசிக்கும் 44 வயதான சஜி மோன் ஒரு கட்சியின் கிளை செயலாளராக உள்ளார். அதே கட்சியில் முக்கிய பொறுப்பு வகிக்கும் இளம்பெண் ஒருவரை அக்கட்சியின் கிளை செயலாளர் சஜிமோன், மற்றும் நாசர் ஆகிய 2 பேரும் அடிக்கடி கட்சி விஷயமாக சந்தித்து பேசி வந்தனர் .அப்பெண்ணும் அவர்களுடன் கட்சி விஷயமாக ஆலோசனையில் கலந்து கொள்வார் .இந்நிலையில் கடந்த மே மாதம் அக்கட்சியின் ஒரு கூட்டத்திற்கு அவ்விருவரும் அந்த பெண்ணை ஒரு காரில் அழைத்து சென்றனர் .அப்போது அந்த இருவரும் அந்த பெண்ணுக்கு காரில் மயக்க மருந்து கலந்த ஒரு ஜூஸை கொடுத்தனர் .அதை வாங்கி குடித்த அந்த பெண் அந்த காரில் மயங்கியுள்ளார் .அதன் பிறகு அந்த பெண்ணை அந்த காரிலே ஆபாசமாக படம் பிடித்தனர் .பின்னர் அந்த இருவரும் அந்த காரில் வைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்தனர் .
இதன் பிறகு அவர்கள் அந்த பெண்னின் ஆபாச படத்தை சமூக ஊடகசத்தில் வெளியிட்டனர் .அந்த படத்தை பார்த்த பலர் அந்த பெண்ணிடம் இது பற்றி கேட்டுள்ளார்கள் .இதனால் அந்த பெண் அங்குள்ள போலீசில் அந்த இருவர் மீதும் புகார் கொடுத்தார் .
இதையடுத்து கட்சியின் கிளை செயலாளர் சஜி மோன், நாசர் உள்பட 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.