விவாகரத்தான பெண்ணின் வீட்டுக்குள் புகுந்த போலீஸ் அதிகாரி -அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்
இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கரு கலைப்பு செய்ததாக இன்ஸ்பெக்டர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தின் கன்யாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்த 32 வயது நர்சாக வேலை பார்க்கும் ஒரு பெண்ணுக்கு திருமணமாகி டைவர்ஸும் ஆகிவிட்டது .அவரின் 9 வயதான மகளுடன் தனியாக வசித்து வருகிறார் .இந்நிலையில் அந்த பெண்ணை மறுமணம் செய்வதாக கூறி அஜீஸ் என்பவர் ஏமாற்றியுள்ளார் .அதனால் அவர் அடிக்கடி அவர் மீது புகாரளிக்க அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார் .அப்போது அங்கிருந்த சப் இன்ஸ்பெக்டர் சுந்தரலிங்கம் அந்த பெண்ணுக்கு வலை விரித்தார் .அதனால் அவருக்கு ஒரு வீடு பார்த்து குடி வைத்தார் .பின்னர் அவர் ஒருநாள் அந்த பெண்ணின் வீட்டினுள் புகுந்து அவரை பலாத்காரம் செய்ததில் ,அவர் கர்ப்பமானார் .அதன் பிறகு அந்த பெண்ணின் கர்ப்பத்தை அந்த போலீஸ் அதிகாரி சிலருடன் உதவியுடன் கலைத்தார் .இதனால் அந்த பெண் பாதிக்கப்பட்டு அந்த போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகளிடம் புகார் தந்தார் .பின்னர் போலிஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி ,இதில் கோர்ட் தலையிட்டது.
இப்போது எஸ்.ஐ. சுந்தரலிங்கம், பளுகல் காவல் நிலையத்தில் ஏட்டாக இருந்த கணேஷ்குமார், தச்சன்விளாகத்தை சேர்ந்த விஜின் , அபிஷேக் , மூவோட்டுக்கோணம் உமேஷ் , டாக்டர் கார்மல் ராணி, மருத்துவமனை நிர்வாக இயக்குனர் தேவராஜ், அனில்குமார் ஆகிய 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.