"ஆடுகளுக்கு நடுவே ஆடையின்றி பெண்ணை அடைத்து..."அடுத்தடுத்து பட்டப்பகலில் நடந்த பயங்கரம்

 
rape

ஆடு மேய்க்க சென்ற பெண்ணை, சில மர்ம நபர்கள் ஆடுகளுக்கு நடுவே இருந்த ஒரு பட்டியில் வைத்து  பலாத்காரம் செய்து கொலை செய்து விட்டு தலைமறைவாகி விட்டனர் 

GOAT FARMING PROJECT REPORT FOR (100+4)UNIT – Pashudhan praharee


கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் பைலகொங்கலா தாலுகாவை சேர்ந்த 28  வயதான  லட்சுமி என்ற பெண்,  ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார் .அவர் தினமும் பெலகாவியில் இருந்து பல்வேறு இடங்களுக்கு நடந்து சென்று ஆடுகளை மேய்ப்பது வழக்கம்.அப்போதெல்லாம் அவர்  வழியில் ஒரு பட்டி அமைத்து அதை சுற்றி ஆடுகளை கட்டி வைத்து விட்டு, அதன் நடுவே ஓய்வெடுப்பது வழக்கம் 


அதன்படி, சில நாட்களுக்கு முன், தார்வார் மாவட்டம் குந்த்கோல் அருகே உள்ள எரகுப்பி கிராமத்திற்கு ஆடுகளை மேய்த்தபடி நடந்து சென்றார். அப்போது அவர் செல்லும் வழியில் வழக்கம்போல பட்டி அமைத்து தங்கி வந்தார்.அப்போது சில மர்ம நபர்கள் அந்த பெண்ணை அந்த ஆடுகளுக்கு நடுவே இருந்த பட்டியில் வைத்து பலாத்காரம் செய்து விட்டு ,அவரை கொலையும் செய்து விட்டு அரைகுறை ஆடையுடன் வீசிவிட்டு ஓடி விட்டனர் .
அடுத்து அந்த  பெண் வீடு திரும்பாததால் அவரின் குடும்பத்தினர் வந்து தேடி பார்த்துள்ளனர்.அப்போது குந்த்கோல் அருகே வனப்பகுதியில் லட்சுமி பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.போலீசார் அந்த லட்சுமியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர் .அந்த சோதனையில்  லட்சுமி, பலாத்காரம் செய்து, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. பிறகு போலீசார் குற்றவாளிகளை பற்றி விசாரிக்கின்றனர்.