"நீயும் கொஞ்சமாட்டே ,அடுத்தவனையும் கொஞ்ச விடமாட்டே ?" - ஏங்கிய மனைவியால் கணவனுக்கு நேர்ந்த கதி

 
murder


குடித்து விட்டு தினமும் தூங்கிய கணவனை காதலனோடு சேர்ந்து கொன்ற மனைவியை போலீஸ் கைது செய்தது  

girl murder her family by poison
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள குட்டூரை சேர்ந்தவர் 45 வயதான மாரப்பன்  தனது மனைவி 35 வயதான குண்டம்மாளுடன் வசித்து வந்தார் .இந்நிலையில்  மாரப்பனுக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டது .அதனால் தினமும் குடித்து விட்டு வந்து தூங்கி விடுவாராம் .இதனால் அந்த மனைவி அதே பகுதியில் வசிக்கும் சிவசங்கர் என்ற வாலிபருடன் கள்ள உறவு ஏற்படுத்தி கொண்டார் .அதன் பிறகு அந்த குடிகார கணவனுக்கு தெரியாமல் இருவரும் உல்லாசமாக இருந்தனர் .நாளடைவில் அந்த கணவனுக்கு இந்த கள்ள விவகாரம் தெரியவந்து ,அந்த மனைவியை கண்டித்தார் .மேலும் அவரோடு இருக்கும் தகாத உறவினை கை விடுமாறு பல முறை கூறினார் .
அதனால் அந்தப்பெண் கோவப்பட்டு ,இந்த கணவன் உயிரோடு இருந்தால் தங்களின் உல்லாச வாழ்க்கை பாழாகிவிடுமென்று நினைத்தார் .அதனால் அதிரடியாக தன்னுடைய கணவனை கொல்ல முடிவெடுத்தார் .அதன் படி கடந்த வாரம் 17-ந் தேதி இரவு தன்னுடைய கணவனை ஒரு கட்டையால் அடித்து கொலை செய்து விட்டு ,அவர் உடலை மதுக்கடை முன்பு போட்டுவிட்டு அதிகமாக குடித்து விட்டு இறந்து விட்டதாக நாடகமாடினார் .அதன் பிறகு போலீசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்தனர் .அப்போது அவர் அடித்து கொலை செய்யப்பட்டதை கண்டுபிடித்தார்கள் .பின்னர் அவரின் மனைவியிடம் விசாரித்த போது அவர் கள்ளகாதலனோடு சேர்ந்து கணவரை கொன்றதை ஒப்புக்கொண்டார் .பிறகு அவர் மீது வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர்