"பரிசம் போட்டதும் மணப்பெண்ணுடன் படுக்கையை போட்டு .. "-கல்யாணம் நெருங்கியதும் மாப்பிள்ளைக்கு என்னாச்சி தெரியுமா ?

 
marriage


நிச்சயம் செய்த பெண்ணுடன் உல்லாசமாக வாழ்ந்து விட்டு ,கல்யாணத்திற்கு மறுத்த மாப்பிள்ளையை பொது மக்கள் அடித்து கொலை செய்தனர் .

Youth lynched for refusing to marry live-in partner [Representative image]
குஜராத்தின் வல்சாத் என்ற இடத்தில் 20 வயது இளைஞன் சஞ்சய் புஸ்ரா என்பவர் வசித்து வந்தார் .இவருக்கும் அதே ஊரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்ய பெரியோர்களால் முடிவெடுத்து ,நிச்சயதார்த்தமும் நடந்தது.இந்நிலையில் அவர்களின் கல்யாணம் சில காரணங்களால் தள்ளி போய் கொண்டேயிருந்தது .
ஆனால் அந்த இருவரும் கடந்த ஒரு ஆண்டாக புருஷன் பொண்டாட்டிபோல லிவ் இன் ரிலேஷன்ஷிப் ஆக வாழ்ந்து உல்லாசமாக இருந்து வந்தனர் .அதன் பிறகு அந்த பெண்ணின் தந்தை திருமணத்திற்கு ஏற்பாடு செய்த போது அந்த மாப்பிள்ளை சஞ்சய் திடீரென்று திருமணத்திற்கு மறுத்து விட்டார் .இதனால் அந்த பெண்ணின் தந்தை அந்த ஊர் பஞ்சாயத்தில் புகார் கூறினார் .பின்னர் அந்த ஊர் பஞ்சாயத்தில் அந்த சஞ்சய புஸ்ராவை விசாரித்த போது ,அவர் அங்கும் கல்யாணத்திற்கு மறுத்ததால் அந்த ஊர் பொது மக்கள் அவரை அடித்து கொலை செய்து விட்டனர் .இந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது..அதைத் தொடர்ந்து  உத்தம் கவ்லி, லக்ஷ்மன் கவ்லி, ராமன் கவ்லி, சாகன் கவ்லி, சுனில் கவ்லி, மஹ்து கவ்லி மற்றும் சீதாபாய் கவ்லி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்