10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - முதியவர் போக்சோ சட்டத்தில் கைது!

 
rape

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே அழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தை சேர்ந்தவர் 10 வயது சிறுமி. சம்பவத்தன்று இவர் இயற்கை உபாதையை கழிப்பதற்காக, அங்குள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த கல்யாணிபுரத்தை சேர்ந்த முதியவர் கணேசன்(67) என்பவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.

arrest

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான சிறுமியின் பெற்றோர், ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார், முதியவர் கணேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.