தூத்துக்குடியில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கொலை... நண்பர்களிடம் தீவிர விசாரணை!

 
murder

தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தூத்துக்குடி தபால் தந்தி காலனி பகுதியை சேர்ந்தவர் ரெத்தினசாமி. இவர் குளத்தூர் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மரிய குளோரி என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ரெத்தினசாமி, தனது நண்பர்களுடன் சேர்ந்து தாளமுத்துநகர் அருகே உள்ள சிலுவைப்பட்டி கடற்கரைக்கு சென்று மது அருந்தி உள்ளார்.

tuti gh

பின்னர், நண்பர்கள் புறப்பட்டு சென்ற நிலையில், ரெத்தினசாமி கடற்கரையில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.  இதுகுறித்து அந்த பகுதி மக்கள் தாளமுத்து நகர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, ரெத்தினசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ரெத்தினசாமி கொலை செய்யப்பட்டாரா? என அவரது நண்பர்கள் 4 பேரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது