சங்கரன்கோவில் அருகே 10ம் வகுப்பு மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை!

 
dead

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே 10ஆம் வகுப்பு மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆராய்ச்சிபட்டி பகுதியை சேர்ந்தவர்கள் செல்லத்துரை - அமுதா தம்பதியினர். இவர்களது மூத்த மகன் பிரபாகரன்(15). இவர் பனவடலிசத்திரம் பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ள அவர் விடுமுறையில் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில், நேற்று காலை  வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற பிரபாகரன் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

tenkasi ttn

இந்த நிலையில், வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் அவர் சடலமாக கிடந்தார். தகவல் அறிந்த பனவடலிசத்திரம் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசாதனைக்காக சங்கரன் கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் தேர்வு முடிவுகள் வெளியாகும் அச்சத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.