திருச்சி அருகே பெற்றோர் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை!

 
suicide

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே பெற்றோர் கண்டித்ததால் 10ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகேயுள்ள வாசன் சிட்டி மூன்றாவது கிராசை சேர்ந்தவர் லாரன்ஸ். இவரது மகள் நிரஞ்சனா. இவர் சோமரசம்பேட்டை பகுதியில் செயல்பட்டு தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார்.  நிரஞ்சனா படிப்பில் சரிவர கவனம் செலுத்தாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் அவரை கண்டித்து, படிப்பில் கவனம் செலுத்தும்படி அறிவுறுத்தி உள்ளனர். இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார்.

dead body

இந்த நிலையில்,நேற்று காலை அவர் தனது அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது அறைக்கதவு நீண்ட நேரமாக திறக்காதால் பெற்றோர் சென்று பார்த்தபோது தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனால் அவரது பெற்றோர் கதறி அழுதனர். தகவல் அறிந்த சோமரசம்பேட்டை போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர்.