பெரம்பலூர் அருகே 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - இளைஞர் கைது

 
rape

பெரம்பலூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே உள்ள மருதடி குன்னுமேடு கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் ராகவன்(22). இவர் டிராக்டர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், ராகவனும், அதே பகுதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியும் கடந்த சில ஆண்டுகளாக பழகி வந்துள்ளனர். அப்போது, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ராகவன், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமடைந்து உள்ளார். இதனை அறிந்து அதிர்ச்சிக்குள்ளான மாணவியின் பெற்றோர், பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

arrested

அதன் பேரில், போலீசார் ராகவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, மாணவியின் உறவினர்கள் தாக்கியதில் ராகவனின் தாயார் லட்மிசுமி காயமடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், பாடாலூர் போலீசார் மாணவியின் தந்தையை கைது செய்தனர்.