10ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் தொல்லை - முதியவர் போக்சோ சட்டத்தில் கைது!

 
rape

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே 10ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த துப்புரவு தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள நம்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் துப்புரவு பணியாளர் குழந்தைவேலு. உறவினரான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இதுகுறித்து வெளியில் கூறினால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டி உள்ளார்.

arrest

இதனால், பாதிக்கப்பட்ட மாணவி யாரிடமும் கூறாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மாணவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளது. இதானல், பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் அவரிடம் விசாரித்தனர். அப்போது, துப்புரவு தொழிலாளி  குழந்தைவேலு மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து, அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குழந்தைவேலுவை கைது செய்தனர்.