மதுரையில் 11 சிறுமிக்கு பாலியல் தொல்லை... தாயின் 2-வது கணவர் போக்சோவில் கைது!
மதுரை ஆரப்பாளையத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தாயின் 2-வது கணவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 40 வயது பெண். இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இதனால் 6ஆம் வகுப்பு படிக்கும் தனது 11 வயது மகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், அந்த பெண்ணுக்கு, ஆர்.ஆர்.மண்டபம்(35) பகுதியை சேர்ந்த சமையல் மாஸ்டர் கணேசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் 2-வது திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு ஒரு பிள்ளை உள்ளது. இந்த நிலையில், கணேசன் மனைவி இல்லாத நேரங்களில், அவரது முதல் கணவருக்கு பிறந்த மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து செய்து வந்துள்ளார்.
இதில் சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து, சிறுமியின் பாட்டி அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மருத்துவ பரிசோதனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்தபோது, தந்தை கணேசன் பாலியல் தொல்லை அளித்தது தெரிய வந்தது. இதுகுறித்து சிறுமியின் பாட்டி, தல்லாக்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் கணேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.