16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... கூலி தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது!

 
rape

புதுக்கோட்டை அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வார்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், சிறுமிக்கு அதே கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கணேசன்(36) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, கணேசன் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். 

arrest

இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், கணேசன் மீது பொன்னமராவதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில, போலீசார் கூலி தொழிலாளி கணேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.