திங்களூர் பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பில் 2 புதிய ட்ரான்ஸ்பார்மர்கள்... எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார் மக்கள் பயன்பாட்டிற்காக வழங்கினார்!

 
transform

பெருந்துறை அடுத்த திங்களூர் ஊராட்சியில் ரூ.15 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட 2 புதிய ட்ரான்ஸ்பார்மர்களை, அதிமுக எம்எல்ஏ எஸ். ஜெயக்குமார் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதிக்கு உட்பட்ட திங்களூர் ஊராட்சி தங்கமயில் கார்டன் மற்றும் திங்களூர் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் 2 புதிய ட்ரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இன்று ஒப்படைக்கப்பட்டது. ரூ.15 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட இந்த புதிய டிரான்ஸ்பார்மர்களை, பெருந்துறை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு உறுப்பினருமான எஸ்.ஜெயக்குமார், பொதுமக்கள் உபயோகத்திற்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு, திங்களூர் ஊராட்சி மன்ற தலைவர் கீதா வேலாயுதசாமி, பெருந்துறை மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் விஜயன் என்கிற ராமசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். மின்வாரிய செயற்பொறியாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தார்.

transformer

இந்த நிகழ்ச்சியில்,மின்வாரிய உதவி செயற்பொறியாளர்கள் சீனிவாசன், விஜயன், உதவி மின் பொறியாளர்கள் சசிகலா, கோகிலா, செந்தில்குமார், பெருந்துறை ஒன்றிய துணை சேர்மன் உமா மகேஸ்வரன், அதிமுக ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி கே செல்வராஜ், எம்ஜிஆர் மன்றம் ஏ.கே.சாமிநாதன், திங்களூர் எஸ். கந்தசாமி, பொருளாளர் கேபிஎஸ் மணி, விவசாய அணி சாமிநாதன், பொன்னுச்சாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள்- பெரிய வீரசங்கிலி ராதாமணி சிவகுமார், கராண்டிபாளையம் கே.எம்.செல்வராஜ், போல நாயக்கன்பாளையம் சரஸ்வதி சோமசுந்தரம், பாண்டியம்பாளையம் செல்வமணி நாகேஸ்வரன், திங்களூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி தலைவர் அருளானந்தம், கிளை செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.