வானூர் அருகே நீச்சல் குளத்தில் தவறி விழுந்து 3 வயது சிறுமி பலி!

 
drowned

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே தனியார் நீச்சல் குளத்தில் தவறி விழுந்து 3 வயது சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பொம்மையாளர் பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான சொகுசு பங்களா உள்ளது. இங்கு அருணகிரிநாதன் என்பவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இவரது 3 வயது மகள், பங்களாவில் உள்ள நீச்சல் குளத்தின் அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக சிறுமி நீச்சல் குளத்தில் தவறி விழுந்தார்.

vilupuram

இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே உயிரிந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால், சிறுமியின் பெற்றோர் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து வானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீச்சல் குளத்தில் தவறி விழுந்து 3 வயது பெண் குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.