விழுப்புரம் அருகே 400 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் - ஒருவர் கைது!

 
liquor

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே ஏரிக்கரையில் பதுக்கிவைத்திருந்த 400 லிட்டர் சாராய ஊறல்களை போலீசார் பறிமுதல் செய்த அழித்தனர்.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரபாண்டி பகுதியில் சாராய ஊறல்கள் உள்ளதாக, மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், அரகண்டநல்லூர் காவல் ஆய்வாளர் சித்ரா தலைமையில் காவலர்கள் உதய கதிரவன், ரங்கநாதன் ஆகியோர் வீரபாண்டி பெரிய ஏரிக்கரை பகுதியில் நேற்று முன்தினம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

dd

அப்போது, அந்த பகுதியில் 2 பேரல்களில் சுமார் 400 லிட்டர் சாராய ஊறல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, போலீசார் சாராய ஊறல்களை அதே பகுதியில் தரையில் கொட்டி அழித்தனர். மேலும், சட்ட விரோதமாக சாராய ஊறல் அமைத்த வீரபாண்டி பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.