கர்நாடகாவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்திய 450 கிலோ குட்கா பறிமுதல் - ஒருவர் கைது!

 
gutka

கிருஷ்ணகிரி அருகே கர்நாடகாவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்திவந்த ரூ.2.89 லட்சம் மதிப்பிலான 450 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக ஒருவரை கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி காவல் நிலைய  எல்லைக்குட்பட்ட புலியரசு மேடு பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை சந்தேகத்தின் பேரில் போலீசார் மறித்து சோதனையிட்டனர். அப்போது, சரக்கு வாகனத்தில் இருந்த மூட்டைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா புகையிலை பொருட்கள் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து, வாகனத்தில் இருந்த சுமார் 450 கிலோ புகையிலை பொருட்களும், கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

krishnagiri

பறிமுதலான குட்காவின் மதிப்பு ரூ.2 லட்சத்து 89 ஆயிரம் ஆகும். இதுதொடர்பாக திருச்செந்துர் அருகே உள்ள நாசரேத் பகுதியை சேர்ந்த குணசேகர் என்பரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டர். அதில் அவர் கர்நாடகாவில் இருந்து வேலுருக்கு குட்கா பொருட்களை கடத்திச் சென்றது தெரியவந்தது. மேலும், இந்த கடத்தல் சம்பவத்தில் யாருக்கும் தொடர்பு உள்ளதா? என போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.