செய்யாறு அருகே திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ விசாரணை!

 
suicide

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து  கொண்ட சம்பவம் குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

காஞ்சிபுரம் மாவட்டம் கூத்திரப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் ரோகிணி (19). இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வடப்பூண்டிபட்டை சேர்ந்த  கூலி தொழிலாளி ரமேஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ரோகிணி கணவர் வீட்டில் வசித்து வந்த நிலையில் அவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

tiruvannamalai

இதில் அவர் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். மேலும், வாழ்வில் விரக்தியடைந்த ரோகிணி நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ரோகிணியின் பெற்றோர் அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி மோரணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருன்றனர். இதனிடையே, திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் விஜயராஜ் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.