திருச்சி அருகே மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி பலி!

 
tri

திருச்சி மாவட்டம் குணசீலம் அருகே மின்சாரம் தாக்கி 6 வயது பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் குணசீலம் அருகே உள்ள மஞ்சக்கோரை கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் தேவதர்ஷினி(6). இவர் ஏவூர் அய்யம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுமுறை காரணமாக நேற்று வீட்டில் இருந்து சிறுமி தேவர்தனிஷி, வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார்.

dead body

அப்போது, மின்கம்பத்தில் இருந்து வீட்டிற்கு வரும் மின்சார ஒயர் செல்வதற்கு உதவியாக ஊன்றப்பட்டிருந்த இரும்பு கம்பியை அவர் பிடித்துள்ளார். அப்போது, கம்பத்தில் மின்சாரம் கசிந்த நிலையில், அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கிவீசப்பட்டதில் அவர் மயங்கி விழுந்தார். இதனை அடுத்து, உறவினர்கள் அவரை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமி தேவதர்ஷினியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.  

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கதறி அழுதனர். தகவல் அறிந்த வாத்தலை போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மின்சாரம் தாக்கி 6 வயது சிறுமி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.