6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... பள்ளி மாணவர் போக்சோ சட்டத்தில் கைது!

 
rape

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 9ஆம் வகுப்பு மாணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி மகள் 6 வயது சிறுமி. இவர் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் 9ஆம் வகுப்பு மாணவர் சிறுமியை தனியே அழைத்துச் சென்று, அவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.

pocso

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இதுகுறித்து விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 9ஆம் வகுப்பு மாணவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.