வாடிப்பட்டி அருகே 6ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

 
suicide

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தந்தை புதிய செருப்பு வாங்கி தராததால் 6ஆம் வகுப்பு மாணவர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள சாணாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜாங்கம். விவசாயி. இவரது மனைவி ராமாயி. இவர்களுக்கு திவ்யதர்ஷினி(17) என்ற மகளும், விக்னேஷ்(11) என்ற மகனும் உள்ளனர். திவ்யதர்ஷினி, 12ஆம் வகுப்பும், விக்னேஷ் 6ஆம் வகுப்பு படித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ராஜாங்கம் தனது மகள் திவ்யதர்ஷினியை மட்டும் கடைக்கு அழைத்துச்சென்று, அவருக்கு புதிய செருப்பு வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் தனக்கு புதிய செருப்பு வாங்கி தரவில்லை என விக்னேஷ் மனவேதனையில் இருந்துள்ளார்.

dead

இந்த நிலையில், தனது வீட்டின் அருகில் உள்ள மரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு பெற்றோர் கதறி அழுதனர். தகவலின் பரில், வாடிப்பட்டி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.