திண்டுக்கலில் தலைமைக் காவலராக பணிபுரிந்த 81 பேருக்கு எஸ்.எஸ்.ஐ ஆக பதவி உயர்வு!
திண்டுக்கல் மாவட்டத்தில் தலைமை காவலர் பதவியில் இருந்து, சிறப்பு சார்பு ஆய்வாளராக பதவி உயர்வு பெற்ற 81 பேருக்கு, மாவட்ட எஸ்பி சீனிவாசன் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழக அரசின் ஆணைப்படி கடந்த 1997ஆம் ஆண்டு தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலராக பணிக்கு சேர்ந்து 25 ஆண்டுகள் பணி நிறைவு பெற்றவர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளராக பதவி உயர்வு அளிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கு, போக்குவரத்து காவல், ஆயுதப்படை மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணிபுரிந்து 25 ஆண்டுகள் எவ்வித தண்டனை மற்றும் காவல்துறை ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படாத பெண்கள் உள்பட 81 தலைமை காவலர்கள், சிறப்பு சார்பு ஆய்வாளராக பதவி பெற்றனர்.
இந்த நிலையில், பதவி உயர்வு பெற்ற சிறப்பு ஆய்வாளர்களை, மாவட்ட எஸ்பி சீனிவாசன் நேரில் அழைத்து பாராட்டி பணியில் திறன்பட செயல்பட வேண்டுமென அறிவுறுத்தினார். இந்த நிகழ்வில் மாவட்ட சைபர் கிரைம் ஏடிஎஸ்பி சந்திரன் மற்றம் டவுன் டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.