பெற்றோர் சண்டையிட்டதால் வேதனையில் 9ஆம் வகுப்பு மாணவி தற்கொலை!

 
suicide

தேனி மாவட்டம் போடியில் பெற்றோர் சண்டையிட்டதால் மனமுடைந்த 9ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தேனி மாவட்டம் போடி மின்வாரிய அலுவலக பகுதியில் வசித்து வருபவர் இருளாண்டி. தொழிலாளி. இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு ஷாலினி, ஜனனி(14) என்ற 2 மகள்கள் உள்ளனர். ஜனனி, அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், இருளாண்டிக்கும், அவரது மனைவி விஜயாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

theni

இதனால், ஜனனி மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று பெற்றோர் வெளியே சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஜனனி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த பெற்றோர், ஜனனி தற்கொலை செய்து கொண்டதை கண்டு கதறி அழுதனர். தகவலின் பேரில், போடி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தற்கொலை செய்வதற்கு முன்பாக அவர் எழுதிய கடிதத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். பெற்றோர் சண்டையிட்டதால் விரக்தியில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.