கமுதி அருகே 7 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை... வருவாய் கோட்டாட்சியர் விசாரணை!

 
 suicide

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே 7 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள செங்கப்படை கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன். இவர் கடந்த 7 மாதங்களுக்கு மோகனப்பிரியா(22) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பெற்றோர் எதிர்ப்பு காரணமாக வெளியூரில் வசித்து வந்த மதியழகன் - மோகனபிரியா தம்பதியினர் கடந்த சில மாதங்களுக்கு சொந்த ஊரான செங்கப்படைக்கு திரும்பினர். தற்போது மோகன பிரியா 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில், நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மோகனபிரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

kamuthi

தகவல் அறிந்து வந்த கமுதி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர் தற்கொலை செய்வதற்கு முன்பாக எழுதிய கடிதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில்  தனக்கு தீராத தலைவலி இருந்ததால் தற்கொலை செய்து கொள்வதாகவும், இதற்கு வேறு யாரும் காரணமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, மோகனபிரியாவின் பெறறோர் அளித்த் புகாரின் அடிப்படையில் கமுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமான 7 மாதத்தில் மோகனபிரியா உயிரிழந்து விட்டதால் இந்த சம்பவம் குறித்து பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். காதல் திருமணம் செய்த 7 மாத கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.