பொன்னமராவதி அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி

 
accident

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்த சிறுவன், டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான் 

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கருகப்பூலாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அன்புமணி(16). இவர் நேற்று அதே கிராமத்தை சேர்ந்த கருப்பையா என்பவருடன் டிராக்டரில் புதுக்கோட்டை - பொன்னமராவதி சாலையில் சென்று கொண்டிருந்தார். கண்டெடுத்தான் விளக்கு பிரிவு அருகே சென்றபோது டிராக்டரில் அமர்ந்திருந்த அன்புமணி எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். அப்போது, டிராக்டர் டிரைலர் சக்கரம் ஏறியதில் அவர் பலத்த காயமடைந்தார்.

ponnamaravathi

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பொன்னமராவதி வலையப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அன்புமணி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் காரையூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.