வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் குழந்தை பலி... ஆம்பூர் அருகே சோகம்!

 
ambur

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வீட்டின் இடிந்து விழுந்ததில் 3 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள சோமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேந்தர். தொழிலாளி. இவரது மகள் 3 வயது மகள் வர்ஷினி. நேற்று மாலை குழந்தை தனது வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்துள்ளார். கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக, சுரேந்தர் வீட்டின் மாடிச்சுவர் ஈரப்பதத்துடன் காணப்பட்டுள்ளது. அப்போது, திடீரென மாடிச்சுவர் இடிந்து குழந்தை வர்ஷினியின் மீது விழுந்துள்ளது. இதில், குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் குழந்தையை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ambur

அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை வர்ஷினி பரிதாபமாக உயிரிழந்தது. தகவலின் பேரில் ஆம்பூர் கிராமிய போலீசார், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வீட்டின் சுவர் இடிந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.