குடும்ப தகராறில் மனைவியை மண்வெட்டியால் வெட்டிக்கொன்ற கணவர்... தேவக்கோட்டை அருகே பயங்கரம்!

 
murder

தேவகோட்டை அருகே குடும்ப  தகராறில் மனைவியை மண்வெட்டியால் தாக்கி கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள இரவியமங்கலம் புதுக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த நாகநாதன் மகன் தனபாலன் (45). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி சினேக வள்ளி (35) என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். தனபாலனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் நாள்தோறும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் சினேகவள்ளி கோபித்துக்கொண்டு அதே பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று மாலை சினேக வள்ளியின் வீட்டிற்கு மதுபோதையில் சென்ற தனபாலன், அவருடன் தகராறில் ஈடுபட்டு உள்ளார். 

devakottai

அப்போது, ஆத்திரமடைந்த தனபாலன் வீட்டில் இருந்து மண்வெட்டியை எடுத்து சினேகவள்ளியை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த திருவேகம்பத்தூர் போலீசார், சினேக வள்ளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, தப்பியோடிய தனபாலனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.