திருவண்ணாமலை அருகே பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை - போலீசார் விசாரணை!

 
fire accident

திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அருகே 10ஆம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அருகே உள்ள சே.ஆண்டப்பட்டு கிராமத்தை சக்திவேல் (45). கூலி தொழிலாளி. இவரது இரண்டாவது மகள் சந்தியா(15). இவர் தானிப்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 5ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த சந்தியா திடீரென உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார். இதில் தீக்காயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு, சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

tiruvannamalai

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி சந்தியா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மாணவியின் தந்தை சக்திவேல் அளித்த புகாரின் அடிப்படையில், தானிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.