ஓசூர் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

 
suicide

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பெத்தஎலசகிரி பகுதியை சேர்ந்தவர் ஆனந்த். இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் லட்சுமி தேவி(22) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். லட்சுமிதேவி தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் லட்சுமி தேவி மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார்.

hosur

இந்த நிலையில், சம்பவத்தன்று ஆனந்த் - லட்சுமி தேவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் விரக்தியடைந்த லட்சுமி தேவி அன்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு குடும்பத்தினர் கதறி அழுதனர். தகவலின் பேரில் ஓசூர் அட்கோ போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் அடிப்படையில் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமான 5 ஆண்டுகளில் லட்சுமி தேவி தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.