உத்தமபாளையத்தில் காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு!

 
dead

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் காதல் திருமணம் செய்த ஒன்றரை மாதத்தில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஆர்.சி. வடக்குத் தெருவை சேர்ந்தவர் சவரிமுத்து. இவரது மகன் வினித் ( 24). கூலி தொழிலாளியான இவரும், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள காஞ்சம்பட்டியை சேர்ந்த சத்யா (21) என்பவரும் காதலித்து வந்தனர். தொடர்ந்து,  கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து, உத்தமபாளையத்தில் தனது பெற்றோருடன் வினித் - சத்யா  வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை வினித் வேலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

theni

இதனை அடுத்து, வினித் பெற்றோருடன் சத்யா இருந்துள்ளார். அப்போது, சத்யா திடீரென மயங்கி விழுந்து விட்டதாக கூறி உறவினர்கள் அவரை உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சத்யா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் குடும்பத்தினர் கதறி அழுதனர். தகவலறிந்து வந்த உத்தமபாளையம் போலீசார், சத்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து சத்யாவின் தாய் குஞ்சம்மாள் அளித்த புகாரின் பேரில் சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமான ஒன்றரை மாதத்தில் சத்யா உயிரிழந்ததால் இந்த சம்பவம் குறித்து உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.