நத்தம் அருகே சிறுமியை கடத்தி திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது!

 
pocso

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே 17 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள ஏரக்காபட்டி கிராமத்தை சேர்ந்தவர் இலக்கின் (32). கூலி தொழிலாளி. இவர் சேர்வீடு ஆத்திப்பட்டியை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அவர் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று திருமணம் செய்துள்ளார். பின்னர் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.

Child marriage

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் இலக்கின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு, அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.