தரமற்ற குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்கள் மீது நடடிக்கை - விருதுநகர் ஆட்சியர் எச்சரிக்கை!

 
virudhunagar

விருதுநகர் மாவட்டத்தில் தரமற்ற குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தெரிவித்தார்.

இததொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் , மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தல்படி குடிநீர் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்களில் உணவு பாதுகாப்புத்துறையின் மூலம் ஆய்வுகள் செய்யப்பட்டன. விருதுநகர் மாவட்டத்தில் ஏற்கனவே குடிநீர் உணவு மாதிரிகள் எடுத்து ஆய்வு செய்யப்பட்டதின் அடிப்படையில் 13 கிரிமினல் வழக்குகள் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 2 வழக்குகளில் அபராதமும், சிறை தண்டனையும் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக இந்த வாரம், குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, இவற்றில் குறைகள் கண்டறியப்பட்ட குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்புத்துறையின் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய  குடிநீர் உணவு மாதிரிகள் தயாரிப்பு நிறுவனங்களில் எடுக்கப்பட்டு ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆய்வுகளின் முடிவின் அடிப்படையில் தாயாரிப்பு நிறுவனங்களின் மீது நீதிமன்றம் மூலம் வழக்குகள் தொடரப்படும்.

water

மக்களுக்கு கிடைக்கக்கூடிய குடிநீர் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். ஆகவே, குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் ISI தரச்சான்றிதழ், பொதுப்பணித்துறையில் இருந்து நிலத்தடி நீர் அனுமதி சான்றிதழ் மற்றும் உணவு பாதுகாப்புத்துறையில் இருந்து FSSAI உரிமம் பெற்றிருக்க வேண்டும். குடிநீர் வினியோகிஸ்தர்கள், மொத்த விற்பனையாளர்கள் அனைவரும் உணவு பாதுகாப்புத்துறையில் உரிமம்/  பதிவு கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.

பொதுமக்கள் குடிநீர் பாட்டில்கள் மற்றும் 20 லிட்டர் கேன்கள் வாங்கும்போது தயாரிப்பு தேதி, பயன்பாட்டு தேதி அச்சிடப்பட்டுள்ளதா என்பதை கவனித்து வாங்க வேண்டும். அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் மற்றும் 20 லிட்டர் கேன்களில் ISI மற்றும் FSSAI எண் இல்லை என்றால் அது போலியானது என்பதை அறியவும்.

குடிநீர் தரம் மற்றும் உணவு கலப்படம் பற்றிய புகார்கள் இருந்தால் உணவு பாதுகாப்புத்துறையின்  வாட்ஸ்அப் புகார் எண் : 94440-42322 என்ற எண்ணிற்கோ அல்லது மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலக 04562 - 225255 எண்ணிற்கோ புகார் தெரிவிக்கலாம் என ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.