பங்குச்சந்தையில் நஷ்டம் ஏற்பட்டதால் முதியவர் தூக்கிட்டு தற்கொலை!

 
suicide

திருச்சி ஸ்ரீரங்கத்தில் பங்குச்சந்தையில் நஷ்டம் ஏற்பட்டதால்  முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  

திருச்சி ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (55). இவர் பங்கு சந்தை தொழில் செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மேலும், தனது சகோதரர் சுரேஷ் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்த நிலையில், சிவகுமாருக்கு பங்குச்சந்தை தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சிவக்குமார் தனது அறைக்கு தூங்க சென்றுள்ளார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவரது அறை கதவு திறக்காமல் இருந்துள்ளது.

dead body

இதனால் சந்தேகமடைந்த சுரேஷ் சென்று பார்த்தபோது, சிவகுமார் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக தொங்கினார். இதனை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீரங்கம் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பங்குச்சந்தையில் நஷ்டம் ஏற்பட்டதால் முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.