வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி அடித்துக்கொலை... மொரப்பூர் அருகே கொடூரம்!

 
dead

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே வீட்டில் தனியாக இருந்து மூதாட்டி மர்மநபர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் மூக்கன். இவரது மனைவி இந்திராணி. இவர்களுக்கு ராஜேஸ்வரி, ரமேஷ் என 2 பிள்ளைகள் உள்ளனர். இருவரும் அதே பகுதியில் வசித்து வருகின்றனர். இதனிடையே கணவர் உடனான கருத்து வேறுபாடு காரணமாக இந்திராணி, மகள் ராஜேஸ்வரி வீட்டில் தங்கி இருந்தார். மேலும், அவர் மந்திரிக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று ராஜேஸ்வரி, அவரது தம்பி ரமேஷ் ஆகியோர் கிராமத்தில் உள்ளவர்களுடன் சேர்ந்து, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். 

murder

இந்த நிலையல், இந்திராணி நேற்று வழக்கம்போல் ஏரி வேலைக்கு சென்றுவிட்டு, மாலை 4 மணி அளவில் வீட்டிற்கு வந்துள்ளார். இதனை தொடர்ந்து, சிறிது நேரத்துக்கு பின் ராஜஸ்வரின் மகள் சுமித்ரா கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, இந்திராணி வீட்டில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதனை கண்ட சுமித்ரா, அலறி துடித்தார். இது குறித்து மொரப்பூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில், தருமபுரி மாவட்ட எஸ்.பி. கலைச்செல்வன் சம்பவ இடத்தை நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து, மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கொலையாளிகன் தடயங்கள் சேகரிக்கப்பட்டது. 

தொடர்ந்து, மொரப்பூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதனிடையே, இந்திராணியின் சடலத்தின் அருகே எலுமிச்சை பலம் கத்தி உள்ளிட்டவை கிடந்துள்ளது. மேலும், அவர் கழுத்தில் அணிந்திருந்த தோடு மாயமாகி உள்ளது. இதனால், அவரிடம் மந்திரிக்க வந்தவர்கள், கொலை செய்துவிட்டு, நகையை திருடிச்சென்றிருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார், இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.