"அரியலூர் விவசாயி மரணம்: உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்" - மாவட்ட காவல்துறை விளக்கம்!

 
police

அரியலூர் மாவட்டம் காசாங்கோட்டையில் விவசாயி உயிரிழந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அரியலூர் மாவட்ட காவல் துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது :- அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட காசாங்கோட்டை கிராமத்தை சேர்ந்த செம்புலிங்கம் என்பவர் இறந்தது குறித்து தவறான தகவல் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. செம்புலிங்கம் என்பவரை காவல்துறை கைது செய்யவோ, காவல் நிலையத்திற்கு அழைத்து வரவோ இல்லை.

ariyalur

செம்புலிங்கம் இறப்பு குறித்து அவரது குடும்பத்தினர் கொடுத்த புகார் அடிப்படையில் விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து வருவாய் கோட்டாட்சியர் அவர்களால் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வழக்கின் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

காவல்துறை மீது அவதூறு பரப்பும் விதத்திலோ, வன்முறை தூண்டும் விதத்திலோ, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் நோக்கிலோ அல்லது விசாரணை திசை திருப்பும் நோக்கிலோ, யாரேனும் செயல்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.