சிறுமியை திருமணம் செய்த ஆட்டோ ஓட்டுநர் போக்சோவில் கைது!

 
arrest

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே 17 சிறுமியை கடத்தி திருமணம் செய்த ஆட்டோ ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே உள்ள சாத்கர் கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவருக்கு, கோட்டைச்சேரி பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பூவரசன் (22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், ஆசை வார்த்தை கூறி கடந்த மார்ச் 29ஆம் தேதி சிறுமியை, பூவரசன் கடத்திச் சென்றுள்ளார். சிறுமியின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனை அடுத்து, சிறுமியை மீட்டுத் தரக்கோரி அவரது பெற்றோர், பேர்ணாம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Child marriage 

அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, விராணை மேற்கொண்டனர். அதில், பூவரசன் வேளாங்கண்ணி கோவிலில் வைத்து சிறுமியை திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது. இதனை அடுத்து, சிறுமியை மீட்ட போலீசார், பூவரசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.