திருப்பத்தூர் அருகே ஆட்டோ - மினிவேன் மோதல்... தாய், 6 மாத குழந்தை பலி!

 
accident

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே ஆட்டோ மீது மினிவேன் மோதிய விபத்தில் தாய் மற்றும் அவரது 6 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருச்சி குமாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கனிமொழி. இவர் தனது 6 மாத குழந்தை சுப பிரியாவுடன் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே உள்ள முனியூர் கிராமத்தில் நடந்த உறவினரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்திற்கு சென்றிருந்தார். இதனை தொடர்ந்து, இன்று காலை ஊருக்கு செல்வதற்காக முனியூரில் இருந்து ஆட்டோவில் வௌக்கல் நத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

tirupattur gh

வாலுர் அருகே சென்றபோது எதிரே வந்த மினிவேன் ஆட்டோ மீது அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கனிமொழி, அவரது 6 மாத குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், கனிமொழியின் தாய் இளவசரி, சகோதரி காயத்தி, அவரது 2 பிள்ளைகள் என 4 பேர் காயமடைந்தனர்.

அவர்களை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த கந்திலி போலீசார், 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.