குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை, தாய் அடுத்தடுத்து உயிரிழப்பு... திருச்சி அருகே சோகம்!

 
dead

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை உயிரிழந்த நிலையில், சிறிது நேரத்தில் தாயும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பழங்கனாங்குடி ராமானுஜர் தெருவை சேர்ந்தவர் திருமாவளன். இவர் லோடுமேனாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கவிமணி(37). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், தற்போது கவிமணி 5 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த கவிமணி எதிர்பாராத விதகமாக கட்டிலில் இடித்துக் கொண்டுள்ளார்.

trichy gh

இதில், அவருக்கு வீட்டிலேயே குறைபிரசம் ஏற்பட்டு பெண் குழந்தை பிறந்து இறந்துள்ளது. இதனை அடுத்து, கவிமணியும், கணவர் திருமாவளவனும் சேர்ந்து வீட்டின் அருகிலேயே குழந்தையை புதைத்துள்ளனர். பின்னர், கவிமணிக்கு தொடர்ந்து உதிரப்போக்கு இருந்து வந்துள்ளது. இதனால், அவரது உடல்நிலை பாதிக்கப்படவே துவாக்குவடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே கவிமணி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறைபிரசவத்தில் தாயும், சேயும் பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.