கோவையில் அரசுப்பேருந்து மீது பைக் மோதி விபத்து - பெயிண்டர் பலி!

 
cbe

கோவை தொண்டாமுத்தூரில் இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில் பெயிண்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம்(23). இவர் பெயிண்டராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் , நேற்றிரவு ராஜமாணிக்கம், தனது நண்பர்கள் அபுதாகிர், வசந்தகுமார் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் தொண்டாமுத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.  தொண்டாமுத்தூர் புதுப்பாளையம் அருகே சென்றபோது, திடீரென இருசக்கர வாகனம் நிலை தடுமாறி எதிரே வந்த அரசுப் பேருந்து மீது மோதியது. இதில் வாகனத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட ராஜமாணிக்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அபுதாகிர், வசந்தகுமார் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். 

accident

அவர்களை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தொண்டாமுத்தூர் போலீசார், ராஜமாணிக்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.