கோவை அருகே அரசுப்பேருந்து மீது பைக் மோதல் - இளைஞர் பலி!

 
accident

கோவை ஆலந்துறை அருகே அரசுப்பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை செம்மேடு பகுதியை சேர்ந்தவர் அசோக் குமார் (26). தொழிலாளி. இவர் நேற்று தனது நண்பரான ஆலந்துறையை சேர்ந்த சபரி கணேஷ்(29) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சிறுவாணி சாலையில் சென்று கொண்டிருந்தார். ஆலந்துறை அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அசோக்குமாரின் வாகனம், எதிரே சாடிவயலில் இருந்து காந்திரபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் மீது அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்து துக்கிவீசப்பட்டதில் படுகாயமடைந்த அசோகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

coimbatore gh

மேலும், சபரி கணேஷுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆலந்துறை போலீசார், உயிரிழந்த அசோகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.