ஜோலார்பேட்டை அருகே ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி!

 
dead

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

வேலூர் மாவட்டம் செதுவாலை இந்திரா நகரில் வசித்து வருபவர் சாண்டில்யன். ஆட்டோ ஓட்டுநர். நேற்று இவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலைக்கு ஆட்டோவில் சுற்றுலா சென்றார். மண்டலவாடி அணுகு சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஆட்டோவில் அமர்ந்திருந்த சாண்டில்யனின் 7 வயது மகன் ஹரிஹரன் தவறி சாலையில் விழுந்தார். இதில் அவர் பலத்த காயமடைந்தார். 

tirupattur gh

உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஹரிஹரன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு பெற்றோர் கதறி அழுதனர். இது காண்போரை கண் கலங்க செய்தது. தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.