திருச்சி அருகே சிறுவன் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை!

 
suicide

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே 17 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் வட்டம் சிறுகாம்பூர் அருகே உள்ள செந்தாமரைக்கண் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார். கூலி தொழிலாளி. இவரது மகன் லோகேஷ் (17).  9ஆம் வகுப்பு வரை படித்துள்ள இவர், கட்டிட வேலைக்கு சென்றுவந்தார்.  கடந்த சில ஆண்டுகளுக்கு முன் செல்வகுமார் இறந்து விட்டார். இதனால் லோகேஷை, அவரது தாய் பராமரித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக லோகேஷ் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்துள்ளார். நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

trichy gh

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வாத்தலை போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் அடிப்படையில் வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாய் கண்டித்ததால்  லோகேஷ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 17 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது