கடலூர் அருகே கட்டிட ஒப்பந்ததாரர் அடித்துக் கொலை... கள்ளக்காதல் விவகாரத்தில் வெறிச்செயல்!

 
murder

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கட்டிட ஒப்பந்ததாரர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள கருங்குழி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தபாபு. கட்டி தொழிலாளி. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி சில ஆண்டுகளுக்கு முன் மனைவி உயிரிழந்து விட்டார். இந்த நிலையில், ஆனந்தபாபு, பெண்ணாடம் அடுத்த பொன்னேரி பகுதியை சேர்ந்த புனிதவள்ளி என்ற பெண்ணுடன் பழகி வந்துள்ளார். அதேவேளையில், புனித வள்ளிக்கு, தர்மா என்பருக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இது ஆனந்த பாபுவுக்கு தெரியவந்த நிலையில் புனித வள்ளியை கண்டித்து, தர்மவுடன் பழகுவதை கைவிடும்படி தெரிவித்துள்ளார். 

arrest

இது தொடர்பாக ஆனந்தபாபுக்கும், தர்மாவுக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை இரவு ஆனந்தபாபு, பெண்ணாடம் பேருந்து நிலையத்தில் ஒப்பந்ததாரர்  திட்டக்குடி கூடலூரை சேர்ந்த உதயராஜா என்பவரிடம் பேசி கொண்டிருந்து உள்ளார். இதனை அறிந்த தர்மா, தனது கூட்டாளிகளுடன் அங்கு சென்று ஆனந்த பாபுவை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கினார். அபபோது, அதனை தடுக்க முயன்ற ஒப்பந்ததாரர் உதய ராஜாவையும் அந்த கும்பல் சரமாரியாக தாக்கியது. 

இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு உதயராஜா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஆனந்தபாபுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகள் தர்மா மற்றும் அவரது கூட்டாளிகள் 7 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.