பொள்ளாச்சி அருகே சரக்கு வாகனம் மீது கார் மோதல் - மூதாட்டி உள்பட 2 பேர் பலி!

 
accident

பொள்ளாச்சி அருகே சரக்கு வாகனம் மீது கார் மோதிய விபத்தில் மூதாட்டி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 4 பேர் பலத்த காயமடைந்தனர்.

கோவை அருகே உள்ள குரும்பப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோதைநாயகம். இவர் தனது உறவினர்கள் மரகதவடிவு, மகாலட்சுமி மற்றும் 7 வயது சிறுவன் ஆகியோருடன் நேற்று உடுமலையில் உள்ள உறவினர் வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். காரை கவியரசு என்பவர் ஓட்டிச்சென்றார்.பொள்ளாச்சியில் இருந்து உடுமலை செல்லும் சாலையில் ஊஞ்சவேலம்பட்டி அருகே சென்றபோது கோதைநாயகம் கார், சாலையை கடக்க முயன்ற சரக்கு வாகனத்தின் மீது மோதியது.

pollachi

இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் நடந்துசென்ற 70 வயது மூதாட்டியின் மீது மோதியது.இந்த விபத்தில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், கோமதிநாயகம் உள்ளிட்ட 5 பேரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே கோதைநாயகம் பரிதாபமாக உயிரிழந்தார்.

மற்றவர்கள் பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்த பொள்ளாச்சி கிழக்கு போலீசார், இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.