குமாரபாளையம் அருகே லாரி மீது கார் மோதல் - அக்கா, தங்கை படுகாயம்!

 
accident

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் சிறுமி உள்பட 2 பெண்கள் பலத்த காயமடைந்தனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஆலங்காடு பகுதியை சேர்ந்தவர்  வெற்றிவேல் - தேவி தம்பதியினர். தேவிகா, சேலம் மாவட்டம் சங்ககிரியில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகள்கள் ஜெயரித்திகா(19), ஜெய்சஷ்டிகா(11). சகோதரிகள் இருவரும் நேற்று சங்ககிரிக்கு சென்றுவிட்டு, காரில் குமாரபாளையத்துக்கு திரும்பி கொண்டிருந்தனர். ஜெயரித்திகா காரை ஓட்டிச்சென்றார். குமாரபாளையம் அடுத்துள்ள அருவங்காடு பகுதியில் சேலம் - கோவை நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென சாலையோர தடுப்பின் மீது  கார் மோதியது.

நாமக்கல்

பின்னர் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பை கடந்து மறுபுறம் உள்ள சாலையில் வந்த லாரி மீது அதிவேகமாக மோதியது. இதில் கார் முற்றிலும் நொருங்கியது. இடிபாடுகளுக்குள் சிக்கி ஜெயரித்திகா, ஜெயசஷ்டிகா ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்