புதுக்கோட்டை அருகே கிணற்றில் முழ்கி கல்லூரி மாணவர் பலி!

 
dead

புதுக்கோட்டை அருகே கிணற்றில் குளித்தபோது தண்ணீரில் முழ்கி தனியார் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் புல்வயல் பகுதியை சேர்ந்தவர் அப்துல்லா. நெல் வியாபாரி. இவரது மகன் ஆசாத்(19). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். ரம்ஜான் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த ஆசாத், நேற்று தனது நண்பர்கள் வினோத், பழனிசாமி உள்ளிட்டோருடன், மேலபழுவஞ்சி கிராமத்தில் உள்ள நண்பர் அபிநாத் வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர், அனைவரும் அபிநாத்துக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றுக்கு சென்று குளித்துள்ளனர். அப்போது, வினோத், ஆசாத் ஆகியோர் கிணற்றின் மேலே இருந்து குதித்து சாகத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனை அபிநாத், தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.

pudukottai

அப்போது, கிணற்றில் குதித்த ஆசாத் திடீரென தண்ணீரில் முழ்கினார். இதனை கண்டு அதிர்ச்சிக்குள்ளான அவரது நண்பர்கள், உடடினயாக அன்னவாசல் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடியபோது மாணவர் ஆசாத், உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். இதனிடையே,