மானாமதுரை அருகே வறுமையால் தம்பதி விஷம் குடித்து தற்கொலை முயற்சி... கணவர் பலியான சோகம்!

 
student suicide

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வறுமையால் தம்பதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில், கணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள நவத்தாவு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. கூலி தொழிலாளி. இவருக்கு முத்துமாரி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். தம்பதியினர் இருவரும் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர். அப்போது கணவன் - மனைவி இருவரும் மதுப்பழக்கத்திற்கு  அடிமையானதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, தம்பதியினர் இருவரும் சொந்த ஊரான நவத்தாவுக்கு வந்துள்ளனர். மேலும், வறுமை காரணமாக தம்பதியினர் இருவரும் மனமுடைந்து காணப்பட்டு வந்தனர்.

dead

இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர்கள் நேற்று முன்தினம்  கிராமத்தில் உள்ள கண்மாய் பகுதியில் மதுவில் எலி மருந்தை கலந்து குடித்தனர்.  உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக்கிடந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரிமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். முத்துமாரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து மானாமதுரை சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.