சுவாமி சிலைகளை பிரதிஷ்டை செய்யும் இடத்தை அடையாளம் காட்டிய நல்லப்பாம்பு... பக்தர்கள் பரவசம்

 
snake

ஈரோடு அருகே திருப்பணி நடைபெறும் கோவிலில் சுவாமி சிலைகளை பிரதிஷ்டை செய்யும் இடத்தை, நல்லபாம்பு ஒன்று அடையாளம் காட்டியதால் பக்தர்கள் பரவசமடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் சிவகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட ரங்கசமுத்திரம் பகுதியில் கன்னிமார், கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலை அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் முற்றிலுமாக புதுப்பித்து, திருப்பணி வேலைகளை செய்து வருகின்றனர். வருகிற மார்ச் மாதம் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு, அதற்கான ஆயத்த பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,  கோவிலை ஆகம முறைப்படி அமைத்து வருகின்றனர். கோவிலில் வழிபடக்கூடிய 7 கன்னிமார்கள் சுவாமி சிலைகளை ஒரே இடத்தில்  வரிசையாக பீடம் அமைத்து பிரதிஷ்டை செய்யக்கூடிய இடங்களை, கடந்த 10ஆம் தேதி தேர்வு செய்து, சுவற்றில் அடையாளப்படுத்தி கோடுகள் வரைந்துள்ளார். 

erode

வழக்கம்போல கோவில் கட்டுமான திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென  சுமார் 10 அடி நீளமுள்ள நல்லபாம்பு (நாக பாம்பு) ஒன்று சர சர வென ஊர்ந்து வந்து, 7 கன்னிமார் சிலைகளையும் பிரதிஷ்டை செய்ய சுவர்களில் அடையாளப்படுத்தப்பட்டு உள்ள 7 கட்டங்களிலும் வரிசையாக 3 அடி உயரம் வரை சுவற்றில் ஊர்ந்து பின் திரும்பி, அடுத்த கட்டத்தில் சுமார் 3 அடி உயரம் வரை எழும்பி ஊர்ந்து பின் திரும்பி, மறுபடியும் அடுத்த கட்டத்திற்கு தானாகவே மாறியுள்ளது. 

இதனை அங்கு வேலைசெய்யும் ஆட்கள், அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் சூழ்ந்து நின்று பக்தி பரவசத்துடன் வேடிக்கை பார்த்தனர். இதனை, கொஞ்சம் கூட பாம்பு கண்டு கொள்ளாமல் கன்னிமார் சுவாமி சிலைகளை பிரதிஷ்டை செய்யும்  7 கட்டங்களிலும் ஒரே அளவு உயரம் வரை நல்லபாம்பு ஏறி இறங்கியது. இந்த நிகழ்வை, அங்கு வேலை பார்த்தவர்கள் தங்களது செல்போனில்  வீடியோவாக படம் பிடித்தனர். தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.