தருமபுரியில் மாதாந்திர உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க அறிவுறுத்தல்!

 
dharmapuri

தருமபுரி மாவடட்த்தில் மாதந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.2 ஆயிரம் பெறும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்  தருமபுரி மாவட்டத்தில் மாதந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.2 ஆயிரம் பெற்று வரும் மனவளர்ச்சி குன்றியோர் (MR/ID) கடுமையாக பதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் (SD), தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் நபர்கள் தங்கள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். 

disable

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், குடும்ப அட்டை ஆகிய ஆவணங்களின் அசல் மற்றும் நகலினை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி என்ற முகவரியில் மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலம் டிசம்பர் 30ஆம் தேதிக்குள் அரசு அலுவலக வேலை நாட்களில் சமர்ப்பிக்கலாம், என ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.